சற்றுமுன்

‘பாகுபலி-2’ திரைப்படத்தை எதிர்மறையாக  விமர்சித்த தங்கர்பச்சான்


எது நடந்தாலும் ஏறுக்கு மாறாக கருத்தைச் சொல்லி வாங்கி கட்டிக்கொள்வது இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் வழக்கம். ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், வழக்கம் போல கருத்து சொல்லிக்கொண்டே இருக்கிறார் அவர். சமீபத்தில் வெளியான ‘பாகுபலி-2’ குறித்து கூட எதிர்மறையாகப் பேசியிருந்தார். இந்நிலையில், இயக்குநர் தங்கர்பச்சானும் ‘பாகுபலி-2’க்கு எதிராகப் பேசியுள்ளார். “வாழ்வியல் குறித்த திரைப்படங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காலம் என்றைக்கு உருவாகுமோ, அன்றைக்குத்தான் மக்கள் அரசியலிலும் தெளிவு பெற்றிருக்கிறார்கள் என்று பொருள். அதுவரை ‘பாகுபலி’ போன்ற திரைப்படங்களும் கொண்டாடப்படும். அவர்களைச் சீரழித்து கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அரசியல் பிழைப்பு நடத்தும் கூட்டங்களும் கொண்டாடப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.