சற்றுமுன்

மே 25 கவுண்டமணிக்கு பிறந்தநாள் வாழ்த்திகள்

இயற் பெயர் : சுப்ரமணி
பிறப்பு :மே 25 1939
வல்லகுண்டாபுரம், கோயம்புத்தூர், இந்தியா
வேறு பெயர் : கவுண்டர் மணி
தொழில் : நடிகர், நகைச்சுவை நடிகர்
நடிப்புக் காலம் : 1964—நடப்பு
கவுண்டமணி, தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். பெரும்பாலான திரைப்படங்களில் இவர் நகைச்சுவை நடிகர் செந்திலுடன் இணையாக நடித்திருக்கிறார். இந்த இணை, ஹாலிவுட் நகைச்சுவை இணையான லாரல் மற்றும் ஹார்டியுடன் ஒப்பு நோக்கி பாராட்டப்படுவதுண்டு.

ஆரம்பகால வாழ்க்கை :
கவுண்டமணி இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சியிலிருந்து திருமூர்த்தி மலைக்குச் செல்லும் வழியில் இருக்கும் வல்லகுண்டாபுரம் கிராமத்தில் மே 25-ல் பிறந்தார். அவரது நாடக மேடை துய்ப்பறிவு தமிழ்த் திரையுலகில் கால் பதிக்க வழி செய்தது. அவர் நடித்த நாடகமொன்றில் ஊர் கவுண்டர் என்ற கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்ததையொட்டி அவர் கவுண்டமணி என்று அழைக்கப்படலானார். 26ஆம் அகவை முதலே திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

திரை வாழ்க்கை :

துவக்கக் காலங்களில் தனியாகவே நகைச்சுவை நடிகராக நடித்தவர், பின்னர் செந்திலுடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளை அமைத்தபின்னர் இருவரும் பெரும் வெற்றி கண்டனர். இரண்டு தலைமுறை இரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். அவரது பேச்சும், உரையாடல்களும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றன.
இந்த இணையின் மிகப் புகழ்பெற்ற நகைச்சுவை கரகாட்டக்காரனில் வந்த வாழைப்பழம் வாங்குதல் குறித்ததாகும். சூரியன் திரைப்படத்தில் அவர் கூறிய அரசியலில்லே இதெல்லாம் சகஜமப்பா என்ற சொல்லாடலும் மிகவும் பரவலாக அறியப்பட்டது.

Goundamani was born on May 25 in Vallagundapuram village on the way to Poothachchi in Thirumoorthy Hill in Coimbatore district of the Indian state of Tamil Nadu. His theatrical stage was a tragedy in the Tamil film industry. He played the role of Ur Gounder in a drama starring as he was known as Goundamani. He is acting in films from the 26th.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.