சற்றுமுன்

அரவிந்த் சாமிக்கு ஜோடியான ஸ்ரேயா

‘துருவங்கள் 16’ படத்தின் இயக்குநரான கார்த்திக் நரேன், தன்னுடைய அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார். மிகக் குறைந்த பட்ஜெட்டில், அனைவரையும் கவரும் வகையில் முதல் படத்தை எடுத்திருந்ததால், அவருடைய அடுத்த படத்துக்கு நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது.

முதல் படத்தில் ரகுமானைத் தவிர புதுமுகங்களை வைத்து எடுத்த கார்த்திக் நரேன், இரண்டாவது படத்திலேயே அரவிந்த் சாமியை ஹீரோவாக வைத்து இயக்கப் போகிறார். இந்தப் படத்துக்கு ‘நரகாசூரன்’ எனப் பெயர் வைத்துள்ளனர்.

அரவிந்த் சாமிக்கு ஜோடியாக ஸ்ரேயா சரண் ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது சிம்புவுடன் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில் நடித்துள்ளார் ஸ்ரேயா. தமிழில் அவ்வளவாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்தவருக்கு, அரவிந்த் சாமி ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது அதிர்ஷ்டம் தான் என்கிறார்கள். இந்தப் படத்தை, இயக்குநர் கெளதம் மேனன் தயாரிக்கிறார்.

Ports 16 'Karthik Narain, the director of the film, is ready for his next film. Shriya Saran has signed a contract with Aravind. Shriya has acted in Simbu's 'Premaan Ustadavavan Aravadavan'. It is lucky that someone who is not too good in Tamil has got the chance to act in the lead with Aravind. This film is produced by director Gautham Menon.




aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.