சற்றுமுன்

போஸ்ட்மேனாக நடிக்கும் சந்தோஷ் பிரதாப்



இரா.பார்த்திபனின் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ மூலம் அறிமுகமானவர் சந்தோஷ் பிரதாப். இவருடைய அடுத்த படத்தில் போஸ்ட்மேனாக நடிக்கிறார். உதயகுமார் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்தில், காதலும் செண்டிமெண்டும் சரிசமமாக இருக்குமாம். ஆனாலும், ஒரு முக்கியமான மெசேஜ் ஒன்றும் படத்தில் இருக்கிறதாம். முதியோர் பென்ஷனில் எப்படியெல்லாம் தில்லுமுல்லு நடக்கிறது என்பதை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்களாம். இதன்மூலம் முதியோர் பென்ஷன் விஷயத்தில் புது வெளிச்சம் பிறக்கும் என்கிறார் இயக்குநர். நிகாரிகா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், ‘லொள்ளு சபா’ சாமிநாதன், மனோபாலா, முனீஸ்காந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். கோபிசெட்டிபாளையத்தில் கதை நிகழ்கிறது. ஆனால், சென்னை மற்றும் கோயம்புத்தூரில் படப்பிடிப்பை நடத்துகிறார்கள். இன்று ஷூட்டிங் தொடங்கியிருக்கிறது.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.