சற்றுமுன்

அரிசி காய்கறி சூப்

அரிசி காய்கறி சூப்
என்னென்ன தேவை?
புழுங்கலரிசி - 1 டேபிள்ஸ்பூன்,
(கேரட், பீன்ஸ், பச்சைப்பட்டாணி, நூல்கோல், கோஸ், நாட்டுக்காய்கறிகள் அவரைக்காய், முள்ளங்கி, பச்சை மொச்சை கொட்டை, சர்க்கரைவள்ளி கிழங்கு, வெள்ளைப்பூசணி) ஏதாவது கலந்த காய்கறிகள் - 1/4 கப் (பொடியாக நறுக்கவும்),
இஞ்சிபூண்டு விழுது - 1/4 டீஸ்பூன்,
நறுக்கிய வெங்காயம் - 1,
நறுக்கிய தக்காளி - 1,
புதினா, கொத்தமல்லித்தழை - சிறிது,
தேங்காய்ப்பால் - 1/2 கப்,
வெண்ணெய் - 3 டீஸ்பூன் + எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - 1 சிட்டிகை,
உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
குக்கரில் வெண்ணெய் + எண்ணெயை ஊற்றி இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கி கரம்மசாலாத்தூள், வெங்காயம், தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை போட்டு வதக்கவும். பின்பு நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்கவும். இத்துடன் ஊறவைத்த அரிசியை போட்டு நன்றாக வதக்கி 3 கப் தண்ணீர், உப்பு போட்டு கொதித்ததும் குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கவும். ஆறியதும் தேங்காய்ப்பால் சேர்த்து பரிமாறவும். குறிப்பு: கத்தரிக்காய், பீர்க்கங்காய், மஞ்சள் பூசணிக்காயை உப்பு போட்டு மசிய வேகவைத்து சூப்பில் சேர்க்கவும்.👇🏾👇🏾                                               

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.