சற்றுமுன்

இந்து மதம் அழிய முக்கிய காரணம்

எதிரியாக இருந்தாலும் தேடி வந்தவரை வா என்று அழைப்பது நமது கலாச்சாரம். விருந்தோம்பலில் சிறந்தவர்கள் என்றும் வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று மார்த்தட்டிக் கொள்கிறோம் ஆனால் உண்மை நிலை என்ன ?

உலகப்புகழ் பெற்ற திருச்சி மலைக்கோட்டை,சென்னை கபாலீஸ்வரர் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய கோவில்களில் Non Hindus are not allowed inside என்கிற வாசகம் அடங்கிய போர்டு(board) வைக்கப்பட்டுள்ளது. அதாவது அந்நிய மதத்தினர் உள்ளே வரக்கூடாது என்ற வாசகம் அடங்கிய போர்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்திய கலாச்சாரத்தை அறிந்தும் இந்து மதத்தின் பெருமையால் ஈர்க்கப்பட்டும், வரலாற்று சிறப்பு மிக்க சிற்பங்களை காண அக்கோவில்களுக்கு வரும் வெளிநாட்டவர் மற்றும் அந்நியமதத்தினரின் மனம் புண்படும் வகையில் இந்த போர்ட அமைந்துள்ளது.

இந்த போர்டு வந்தவர்களை அவமதிக்கும் வண்ணம் கோவிலுக்கு உள்ளே அமைந்துள்ளது இதே போர்டு கோவிலுக்கு வெளியே இருந்தால் யார் மனதும் புண்படாது.

மேலும் இந்து மதத்திற்கு மாற விரும்பும் அந்நிய மதத்தினருக்கு அதற்கு உரிய வழிவகை செய்ய வேண்டிய இந்து அறநிலைத்துறை, அவர்கள் மனம் புண்படும் வகையில் இந்த போர்டை வைத்துள்ளது. 

தற்போது அழிந்து வரும் இந்து மதத்திற்கு மாற விரும்புவோர் இந்து அறநிலைத்துறை கட்டுபாட்டில் உள்ள மடத்திற்கு செல்லவேண்டியுள்ளது. இந்து மதத்தினரின் வழிபாட்டு தலம் கோவில்கள் ,மடங்கள் அன்று என்பது குறுப்பிடத்தக்கது.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.