சற்றுமுன்

தந்திரம் - சிறு கதை

🐕 நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது.
அப்பொழுது அங்கு 🐅 சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த 🐕 நாய் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது.
...
அப்பொழுது அங்கு கிடந்த 🍖எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது.
🐅சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு 🍖எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது. சுவைத்து கொண்டே சத்தமாக, 📢சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு 😋சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை. இன்னொரு 🐅சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயறு நிறைந்து விடும்" என்று கூறியது.
இதைக் கேட்ட 🐅சிங்கம் "அய்யோ..! இந்த 🐕நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது" என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடி போனது.
இதையெல்லாம் 🌴மரத்தின் மேல் இருந்து 🐒குரங்கு ஒன்று பார்த்து கொண்டிருந்தது.
🐅சிங்கத்தை ஏமாற்றிய இந்த🐕 நாயை 🐅சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், 🐅சிங்கத்தின் நடப்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது.
உடனே 🐅சிங்கத்திடம் சென்று,🐕 நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது.
அதை கவனித்த🐕 நாய் எதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்ந்தது.
குரங்கு சொன்னதைக் கேட்ட 🐅சிங்கம் கோபம் கொண்டு, "இப்பொழுது அந்த 🐕நாயை என்ன செய்கிறேன் பார். நீ என் முதுகில் ஏறிக் கொள்" என்று 🐒குரங்கை முதுகில் ஏந்திய படி 🐕நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது.
தன்னை நோக்கி 🐅சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த 🐕நாய், முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு, "இந்த🐒குரங்கை போய் ஒரு மணி நேரமாகிவிட்டது. இன்னும் ஒரு 🐅சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே" என்று 📢உரக்க கூறியது.
இதை கேட்டதும், 🐅சிங்கம் 🐒குரங்கைத் தூக்கி எறிந்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது.

THANTHIRAM a tamil short story inteligence

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.