சற்றுமுன்

சுதந்திர போராட்ட வீரரின் கதையில் சிரஞ்சீவி

நடிகர் சிரஞ்சீவி அரசியல் பிரவேசத்திற்கு பிறகு தன்னுடைய மகன் தயாரிப்பில் ‘கைதி நம்பர் 150’ படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதையடுத்து சுதந்திர போராட்ட வீரர் ‘உயாலவாடா நரசிம்ம ரெட்டி’ வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தையும் நடிகர் ராம் சரணே தயாரிக்கிறார். இப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார்.

இந்த படம் குறித்து சிரஞ்சீவி அளித்துள்ள பேட்டியில், சுதந்திர போராட்ட வீரரின் கதையில் நடிப்பது பெருமையாக உள்ளது. அதோடு இந்த படத்தை முதலில் தமிழ், தெலுங்கில் தான் தயாரிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் சுதந்திரப்போராட்ட வீரர் உயாலவாடா நரசிம்ம ரெட்டியைப் பற்றி இந்தியா முழுக்க உள்ளவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் மெகா பட்ஜெட்டில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது. படத்தை 2018 ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

'Uyyalawada Narasimha Reddy's is going to be a big-budgeted film. Believing in its universal potential, Chiranjeevi and Ram Charan are going to make it in a big way. Broadening the horizons, it will be made in Tamil and Hindi as well.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.