சற்றுமுன்

தண்ணீர் தட்டுப்பாட்டை ஓரளவுக்காவது குறைக்க வேண்டும் ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாட்டை ஓரளவுக்காவது குறைக்க வேண்டும் என்ற நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய குளங்களை தூர் எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் முன்வைத்த வேண்டுகோளை ஏற்று, தி.மு.கழக நிர்வாகிகள் பல்வேறு பகுதிகளில் சிறப்பான வகையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பணிகளை எல்லாம் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து வருகிறார் . அந்த அடிப்படையில் இன்று காலை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மூட்டைக்காரன் ...சாவடி அருகில் உள்ள செல்வ விநாயகர் கோவில் குளம் சீரமைக்கப்பட்டுள்ளதையும், ஜல்லடம்பேட்டை பகுதியில் உள்ள ஜெயசந்திரன் நகர் குடியிருப்பில் இருக்கக்கூடிய குளம் தூர்வாரப்பட்ட நிலையில் அதனையும் பார்வையிட்டார். இதனால் அந்தந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கழகத்தினரை பாராட்டியும் தங்களுடைய மகிழ்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர்.

திமுக ஆளும் கட்சியாக இல்லாமல், எதிர்க்கட்சியாக இருந்து இந்தப் பணிகளை நிறைவேற்றி அதனை வெற்றிகரமாய் முடிப்பதை பார்த்த பிறகாவது ஆளும் கட்சியில் இருப்பவர்களும், பிற கட்சியினரும் இந்தப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

Stalin said that the DMK should not be the ruling party and the opposition as it was to fulfill the tasks successfully and the other parties in the ruling party and other parties should be involved in the process.


aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.