சற்றுமுன்

ஒரு முடிவுக்கு வந்தார் மணிரத்னம் 

மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ படத்தில், கார்த்தி ஜோடியாக நடித்தவர் அதிதி ராவ். ஹைதராபாத்தில் பிறந்தவராக இருந்தாலும், ஹிந்திப் படங்களில்தான் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடித்தபோது, அதிக டெடிகேஷனாக இருந்தாராம் அதிதி. தமிழ் கற்றுக் கொள்வதில் தொடங்கி, சின்னச் சின்ன விஷயங்களில் கூட கவனம் செலுத்தினாராம். இதனால், மணிரத்னத்துக்கு அவரைப் பிடித்துவிட்டதாம். அடுத்து அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ஜோடியை இயக்குவதா அல்லது ராம் சரண் – அரவிந்த் சாமி படத்தை இயக்குவதா என்று குழம்பிக் கொண்டிருந்த மணிரத்னம், தெளிவான முடிவை எடுத்துவிட்டார். முதலில் ராம் சரண் – அரவிந்த் சாமி படம் என்பதுதான் அந்த முடிவு. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக இருக்கும் இந்தப் படத்தில், ஹீரோயினாக அதிதி ராவையே நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார் மணிரத்னம் என்கிறார்கள்.


Mani Ratnam came to an dicission Then Manishtham, who was confused about Abhishek Bachchan - directed by Aishwarya Rai or Ram Charan - directed Aravind Sami, made a clear decision. First of all, Ram Charan - Aravind Samy is the film. In Tamil and Telugu, Mani Ratnam has decided to act as heroine in the film.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.