சற்றுமுன்

இறைவா உன் கருணையால்....பழனி கவிதைகள்

கதிரோன் வருமுன் விழித்திடல் வேண்டும்
விழித்தும் உனை நான் தொழுதிடல் வேண்டும்
தொழுததும் பணிகள் தொடர்ந்திடல் வேண்டும்
தொடர்ந்த பணிகள்  நலமாய் முடிந்திடல் வேண்டும்
முடிந்திட்ட பணியால் புகழ்பெற வேண்டும்
பெற்ற புகழ் நிலைத்திடல் வேண்டும்
நிலைத்த செல்வமனைத்தும் கிடைத்திடல் வேண்டும்
நித்தம் உனை நான் மறவாமை வேண்டும்
நினைப்பனவெல்லாம் நடந்திட வேண்டும்
நடப்பனவெல்லாம் நல்லதாய் வேண்டும்
நல்லதாய் இருப்பது தொடர்ந்திட வேண்டும்
தொடர்ந்திடும் வாழ்க்கையில் இன்பம் வேண்டும்
இன்பம் என்றும் பெறுதல் வேண்டும்
பெற்ற இன்பம் மற்றோர்க்கு அளித்தல் வேண்டும்
அளிக்கும் செயலில் மாறா அன்பு வேண்டும்
அன்பே வாழ்க்கையாய் வாழ்தல் வேண்டும்
வாழும்போது புகழதை ஈட்டல் வேண்டும்
ஈட்டிய புகழ் என்றும் இருத்தல் வேண்டும்
இருக்கும் போது இன்முகம் வேண்டும்
இன்முகத்தோடே இறத்தலும் வேண்டும்

God bless you with your mercy ....

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.