சற்றுமுன்

“காவிரி பிரச்னைக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை” – எஸ்.எஸ்.ராஜமெளலி

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில், எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கியுள்ள ‘பாகுபலி-2’, வருகிற 28ஆம் தேதி நாடு முழுவதும் வெளியாகிறது. ஆனால், 9 வருடங்களுக்கு முன்பு காவிரி பிரச்னையில் கன்னடர்களுக்கு எதிராக சத்யராஜ் பேசியதால், இந்தப் படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என வாட்டாள் நாகராஜ் தலைமையிலான குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய ராஜமெளலி, “இந்தப் படத்தை அவர்கள் எதற்காக எதிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை. கடந்த 9 வருடங்களில், ‘பாகுபலி’ முதல் பாகம் முதற்கொண்டு பல்வேறு படங்கள் ரிலீஸாகியுள்ளன. அப்போது எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள், இப்போது ஏன் எதிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை. காவிரி பிரச்னை, சென்சிட்டிவ்வான பிரச்னை. அதற்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சத்யராஜ் இந்தப் படத்தின் இயக்குநரோ, தயாரிப்பாளரோ கிடையாது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

“இந்தப் படம் அங்கு திரையிடப்படவில்லை என்றால் பாதிப்பு தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்குத்தானே தவிர, சத்யராஜ் போன்ற நடிகர்களுக்கு எந்த இழப்பும் இல்லை” என தயாரிப்பாளர் ஷோபு தெரிவித்துள்ளார்.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.