சற்றுமுன்

ரெண்டு லட்டுக்கு ஆசைப்படும் எஸ்.ஜே.சூர்யா

செல்வராகவன் இயக்கத்தில், எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. இந்தப் படத்தில், நந்திதா மற்றும் ரெஜினா என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். தற்போது, ‘மாயா’ படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கிறார் எஸ்.ஜே. சூர்யா.

இந்தப் படத்திலும் ஷிவதா நாயர், வாமிகா கப்பி என இரண்டு ஹீரோயின்கள். படத்திற்கு, ‘இறவாக்காலம்’ எனப் பெயர் வைத்துள்ளனர். ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படமும் த்ரில்லர் வகையைச் சேர்ந்ததாக இருக்கும் எனத் தெரிகிறது.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.