சற்றுமுன்

யானைகளிடம் மாட்டிய நிவேதா பெத்துராஜ்


‘மிருதன்’ படத்தை எடுத்த சக்தி செளந்தர்ராஜன், அடுத்ததாக இயக்கிவரும் படம் ‘டிக் டிக் டிக்’. ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். சமீபத்தில், இதன் படப்பிடிப்பை கேரளாவின் மூணார் பகுதியில் நடத்தியிருக்கின்றனர். அப்போது, ஷூட்டிங் ஸ்பாட் பக்கத்தில் யானைகள் வந்துவிட்டதாம். மொத்த யூனிட்டும் பயத்தில் உறைந்து போயிருக்கின்றனர். காரணம், அதற்கு சில நாட்களுக்கு முன்புதான் யாரோ ஒருவர் அந்தப் பகுதியில் ஒரு யானையைக் கொன்றுவிட்டார். பழிவாங்கத்தான் இந்த யானைகள் வந்திருக்கிறதோ என்று இவர்கள் பயந்துநடுங்க, அந்த யானைகளோ அருகில் இருந்த ஏரியில் தண்ணீர் குடித்துவிட்டு திரும்பிவிட்டதாம். அதன்பின்னரே அனைவருக்கும் நிம்மதிப் பெருமூச்சு வந்திருக்கிறது. என்ன… நிவேதா பெத்துராஜ் தான் கொஞ்சம் அதிகமாக பயந்துவிட்டாராம்.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.