சற்றுமுன்

இயக்குநரான கவிஞர் குட்டி ரேவதி


கவிஞர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளராக அறியப்பட்ட குட்டி ரேவதி, இயக்குநராகவும் அறிமுகமாக இருக்கிறார். அந்தப் படத்தில், ஹீரோவாக நடிக்கிறார் பிரசன்னா. ஐ.பி.எஸ். பயிற்சி முடித்து பணியில் சேர்ந்த முதல்நாளே மிகப்பெரிய கேஸ் ஒன்று விசாரணைக்காக பிரசன்னாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதை, எவ்வளவு திறமையாக பிரசன்னா விசாரணை செய்கிறார் என்பதுதான் கதை. ஆகஸ்ட் மாதம் ஷூட்டிங் தொடங்க இருக்கும் இந்தப் படத்துக்கான மற்ற நடிகர் – நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. ‘மரியான்’ படத்தில் பரத் பாலாவுடன் பணியாற்றியவர் குட்டி ரேவதி என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘எங்க போன ராசா…’ மற்றும் ‘நெஞ்சே எழு…’ பாடல்களையும் இவர் எழுதியுள்ளார்.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.