சற்றுமுன்

அபிஷேக் – ஐஸ்வர்யா ராயை இயக்கும் மணிரத்னம்?

‘காற்று வெளியிடை’ படத்துக்குப் பிறகு ‘தளபதி’ இரண்டாம் பாகம் எடுக்கப் போகிறார், ராம் சரணை வைத்து தமிழ் – தெலுங்கில் ஒரு படம் இயக்குகிறார் மணிரத்னம் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின.

ஆனால், அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா ராயை வைத்து ஒரு ஹிந்திப் படத்தை எடுக்கப் போவதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. ஏற்கெனவே, ‘குரு’, ‘ராவண்’ படங்களை ஹிந்தியில் இயக்கியுள்ளார் மணிரத்னம்.

இந்தப் படத்தின் மூலம் மீண்டும் அவர் பாலிவுட்டுக்குத் திரும்புகிறார். சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான ‘காற்று வெளியிடை’ படம், எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்தது. இதுமாதிரியான படங்களை பாலிவுட்டில்தான் கொண்டாடுவார்கள் என நினைத்து அங்கு செல்கிறாராம்.


aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.