சற்றுமுன்

பாகுபலி’க்கு சிக்கல் தீர்ந்தது…


எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரமாண்டமான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், வருகிற வெள்ளிக்கிழமை பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில், படத்தை வாங்கியவர்கள் தங்களுக்குப் பணம் தர வேண்டுமென சிலர் நீதிமன்றத்தை அணுகினர். அவர்களை அழைத்து தயாரிப்பாளர்கள் சங்கமும், விநியோகஸ்தர்கள் சங்கமும் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னையை சுமூகமாகத் தீர்த்து வைத்தனர். இதனால், வழக்கு தொடுத்தவர்கள் தங்கள் வழக்குகளை வாபஸ் வாங்கிக் கொள்ள, தமிழ்நாட்டில் ‘பாகுபலி’க்கு ஏற்பட்டிருந்த சிக்கல் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. வரும் வெள்ளிக்கிழமை எந்தச் சிக்கலும் இல்லாமல் தமிழகத்தில் ரிலீஸாகப் போகிறது ‘பாகுபலி-2’.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.